Skip to content
Home » சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

  • by Senthil

வழக்கமாக கோவில் திருவிழா, மழை வெள்ளம் போன்ற இயற்சை சீற்றங்கள் ஏற்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இன்று மயிலாடுதுறை நகரில், அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் நேற்று இரவு மயிலாடுதுறையில் சிறுத்தை ஒன்று நடமாடியதாக தெரியவந்ததால்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை, கூறைநாடு பகுதியில் சிறுத்தை உலவுவதாக தகவல் வந்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி கூறைநாடு பகுதியில் உள்ள சிபிஎஸ்சி/ மெட்ரிக்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி/ இளம் மழலையர் பள்ளிகள் இன்று 03.02.2024 ஒரு நாள் விடுமுறை அளித்து அதன் விவரத்தினை மயிலாடுதுறை, மாவட்ட கல்வி அலுவலகம் ( தனியார் பள்ளிகள்), தகவல் தெரிவித்திட கூறைநாடு பகுதியில் உள்ள பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!