சென்னை: பூவிருந்தவல்லியில் அரசு பள்ளி உணவில் பல்லி இருந்ததால் 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
