Skip to content
Home » மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

  • by Senthil

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி வருகிறது.  இதனால் கடந்த 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் முடங்கின. மக்களவையில் இன்று 5ம் நாளாக எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பின. இதனால் சபையில் அமளி ஏற்பட்டதால்,  இன்று முழுவதும்  சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார் . இதனால் 5வது நாளாக இன்றும் மக்களவை முடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!