Skip to content
Home » திருச்சியில் லாட்டரி விற்பனை .. கண்டு கொள்ளாத அதிகாரிகள்..

திருச்சியில் லாட்டரி விற்பனை .. கண்டு கொள்ளாத அதிகாரிகள்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி பாமக மாவட்ட மாநகர செயலாளர் வீக்குமார் மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர்.. அதில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட  லாட்டரி அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால்  விற்பனையை செய்யும் கடை உரிமையாளரையும், முகவர்களையும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 26.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல், கடையில் வாங்கி செல்லக்கூடிய அப்பாவி நபர்கள் இரண்டு பேரை மட்டும் கைது செய்துள்ளனர். விற்பனை செய்யக்கூடிய ஏஜெண்டுகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காந்தி மார்க்கெட் சுற்றியுள்ள மீன் மார்க்கெட், பழகடை, வாழைக்காய் மண்டி, தாராநல்லூர், வரகனேரி, தஞ்சை ரோடு, பால்பண்ணை ஆகிய பகுதிகளில் டேபிள் போட்டு ஜோராக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து திருச்சி மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இது போன்று தடையை மீறி லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனையும் சகஜமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தடையை மீறி விற்பனை செய்யும், விற்பனையாளர்கள் ஏஜெண்டுகள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!