Skip to content
Home » காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது 25) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வினோதினி கிருஷ்ணமூர்த்தியுடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி தனியாக வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி  நேற்று காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அவர் தந்தை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் எடுக்காததால், அவர் வசித்து வரும் வீட்டிற்கு தேடிவந்துள்ளார். அங்கு அவரது செருப்புகள் வெளியே இருந்த நிலையில் மீண்டும் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரிங்  உள்புறம் ஒலிக்கவே, வேசந்தேகப்பட்டு அவர் கதவை உடைத்துள்ளார். இதையடுத்து கதவைத் திறந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்

கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் நூல் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து தொங்கிய நிலையில் கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அதில் தனது மனைவி வினோதினி 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் என்றும், இதனால் தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும் தனது மனதில் உள்ளதை  வெளிப்படுத்தி கண்ணீர் சிந்தி பேசியுள்ளார். மேலும் தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக்கொள்ளும்படியும் தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேசியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!