மார்க்சிய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 102 வயது நிரம்பிய சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். இது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல முறை கோரிக்கை வைத்தும் அதனை கவர்னர் ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் நாளை நடைபெறும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். கவர்னரின் செயலை கண்டித்து இந்த விழாவை பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.