Skip to content
Home » மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Senthil

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை  குறைந்து வந்தாலும்,  இன்னும் வெள்ளம் வடியவில்லை. அதே நேரத்தில் இன்று மதியம் 1 மணி வரை  மதுரை, விருதுநகரில் மிக கனமழை பெய்யும் என  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.  தூத்துக்குடி, தேனி, நீலகிரி,  திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில்  இடியுடன்  மழைபெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக  தென் மாவட்டங்களுக்கு செல்லும்  பல ரயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!