Skip to content
Home » மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 06/12/2023 அன்று நடைபெற்றது. இம்முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்தர் ஷீலா அவர்களின் உத்தரவின் பேரில், நோய் புலனாய்வு பிரிவுஉதவி இயக்குனர் மரு. சே. சுகுமார்வையம்பட்டி கால்நடை மருத்துவர் மரு. ரவிசங்கர், ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், மரு. B. K. ரமேஷ்,மரு.த.மாரிமுத்து,மரு.செ.செந்தமிழ்ச்செல்வன்,கால்நடை ஆய்வாளர்கள்

செந்தில் குமார், சுசிலா, மு௫காயி,கி௫ஷ்ணவேனிபாரதிகால்நடை பராமரிப்பு உதவியாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டு, சுமார் 650 பசுக்கள், 260 வெள்ளாடுகள், 165 செம்மறியாடுகள், 196 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். கன்று பேரணியில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான பரிசும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!