மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. பிரேன்சிங் முதல்வராக உள்ளார்.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில் இன்று முதல்வர் ராஜினாமா கடிதத்துடன் இம்பாலில் கவர்னரை சந்திக்க சென்றார். அப்போது முதல்வருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு வந்து அவரை தடுத்து நிறுத்தி, ராஜினாமா செய்யக்கூடாது என கூறி கடிதத்தை கிழித்து போட்டனர். இதனால் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா முடிவை கைவிட்டார். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.