Skip to content
Home » மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர். இன்று முதல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றங்களை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தரங்கம்பாடி நீதிமன்றம் மற்றும் சீர்காழி நீதிமன்றம் என 13 நீதிமன்றங்களிலும் வழக்குப்பணிகள் பாதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!