Skip to content
Home » மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனி வயது 46. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சண்டையிட்டு வீட்டை விட்டு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். இதனிடையே வீட்டிற்கு அருகே உள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் பழனி உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை உதவியுடன் இறந்த நபரின் உடலை மீட்ட நிலையில் காணாமல் போன பழனியின் உடல் என்பதனை பார்வையிட்டு போலீசார் உறுதி செய்தனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்ற்காக உடலை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார்விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!