Skip to content
Home » மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மகி என்கிற மகேந்திரன் (50). இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் பெய்த தேங்கி மழை நீரை இரும்பு கம்பி கொண்டு அகற்றி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கம்பி எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் உரசியது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் சந்தேகம் மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகேந்திரன் செம்பனார்கோயில் போலீசார் ரவுடி படியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!