Skip to content
Home » டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியன் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னால் சட்டமன்ற

உறுப்பினரும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆசைமணி,வர்த்தக சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி,முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டாபிராமன், பாண்டிச்சேரியை சேர்ந்த மாஸ்டர் இளங்கோவன்,தமிழ்நாடு டேக்வாண்டோ பிரிவின் சட்ட ஆலோசகர் வைரவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் நிர்வாகி காயத்ரி நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!