Skip to content
Home » துரை வைகோவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு……பாசிசத்தை எரிக்கும் தீப்பெட்டி என கோஷம்

துரை வைகோவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு……பாசிசத்தை எரிக்கும் தீப்பெட்டி என கோஷம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி  மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.   இன்று காலை துரை வைகோ,  புதுக்கோட்டை நகருக்கு சென்றார். அங்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில்   வேட்பாளருக்கு,  திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மமக, முலீக் என  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருக்கோகர்ணம் பகுதியில் இருந்து துரை வைகோ பிரசாரத்தை தொடங்கினார்.  தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களியுங்கள்,  பாசிசத்தை  சுட்டெரிக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள், ஜனநாயகம் காக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள் என  தொண்டர்கள் முழக்கமிட  ஊர்வலமாக சென்றனர்.

கோவில்பட்டி,,திருவப்பூர்,புதுத்தெரு,அடப்பன்வயல், உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி சின்னத்திற்கு   வாக்கு சேகரித்தார்.
துரை வைகோ சென்ற இடங்களில் எல்லாம் திமுக மற்றும் தோழமைகட்சியினர்
சிறப்பான வரவேற்பு அளித்தனர். அமைச்சர் ரகுபதி, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

வேட்பாளருடன்  அமைச்சர் ரகுபதி,  மாவட்ட திமுக செயலாளர்  செல்லபாண்டியன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,வடக்கு மாவட்டதிமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, நகர திமுக செயலாளர்
ஆ.செந்தில், ம.திமுகமாவட்டபொறுப்பாளர் கலியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் க.நைனாமுகம்மது,வட்டசெயலாளர்கள் ஆஷிப்,ரெங்கராஜ்,கண்மணிசுப்பு,மீனாட்சிசுந்தரம்,ராஜா,சாத்தையா,
சித்ரா,பெ.ராஜேஸ்வரி, கவுன்சிலர் லதாகருணா, காங்கிரஸ் மேப்வீரையா,
உள்ளிட்ட  ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!