மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…
காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டில் பல இடங்களில் அணை கட்டினாலும் நாங்கள் எதுவும் கேட்பதில்லை.
காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்.
மேகதாது அணை தொடர்பான பிரதமரை தமிழ்நாடு அணுகுவதெல்லாம் அரசியல் நோக்கம் கொண்டவை.
மேகதாது அணையில் இருந்து பெங்களூரு குடிநீருக்கும், மின்சாரத்துக்கும் மட்டுமே நீர் எடுக்கப்படும்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது.
மேகதாது அணை, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது.
மேகதாது அணை ஒரு பேலன்சிங் அணை. அதிலிருந்து ஒரு பக்கெட் நீர் கூட பாசனத்திற்காக எடுக்கமாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
