மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் எனப் பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நம்மைச் சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அமைச்சர் உதயநிதியுடன் வழங்கினார். அமைச்சர் உதயநிதி கூறியதாவது…. அன்பும் – நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம் என தெரிவித்துள்ளர்.