Skip to content
Home » மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுபடகுகளும், மல்லிபட் டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசை படகுகளும் உள்ளன.

விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களிலும், பிற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டம் கடலோர பகுதியில் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாலும் கடல் சீற்றமாக கானப்படுவதாலும் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் உடனடியாக் கரை திரும்பும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் சீற்றமாக காணப்படுவதால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!