Skip to content
Home » புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

ச்ட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை மீதான மான்ய கோரிக்கை மீது அமைச்சர் நேரு பேசிய போது வெளியிட்ட அறிவிப்புகள்… 
* 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
* அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.
* புதிய மாநகராட்சிகள் குறித்த அறிவிப்புகள் இனி வெளியாகும்.
* தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.
* நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139 ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும்.
* சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* சென்னையில் தற்போது 89 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒரு வார்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
*தெருநாய்கள் பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும்பணிகளை அரசு மேற்கொள்ளும்
*கோவிட் காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
*தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலம், அதன் எண்ணிக்கை குறைக்கப்படும்.
*சென்னையில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ ரயில் திட்டப் பணிகளே காரணம்.
* சென்னை போன்ற பெருநகரங்களில் மாடுகள் திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!