Skip to content
Home » என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச அகோரி சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி வந்தால் ரூ10 கோடி பரிசு தருவேன் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..  சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார் என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார். 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கருணாநிதியின் தலையை சீவினால் ரூ1 கோடி என்று விலை வைத்தார். நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கருணாநிதி கேட்டார். ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணாநிதி பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!