அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம் துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவே கண்டித்து உள்ளது. எதிர்க்கட்சி முதல்வர்கள், அகில இந்திய தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிட்டு, கைது நடவடிக்கையை கண்டித்து வருகிறார்கள்.
அமைச்சர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான மகேஷ் கண்டன அறிக்கை என்கிற பெயரில் ஒரு ட்வீட் செய்து உள்ளார். அதில் அமைச்சர் மகேஸ் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை ஆகிய பெயர்களும் பயன்படுத்தவில்லை. ஏன் அமைச்சர் மகேஸ் இந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை.. ..
திமுக தொண்டர்களை கொதிப்பில் ஆழ்த்திய அந்த ட்வீட் இதோ”
தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மூலமாக தனக்கு எதிரான முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்த பாஜக முயற்சிக்கின்றது.
கொள்கை உறுதியோடு, பயணிக்கும் திமுக இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது.
மாண்புமிகு கழக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.