அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி. ஜெயசந்திரன் முன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இந்த மனுவை தாக்கல் செய்து, அமைச்சரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
சூழ்நிலைகள் உத்தரவாதமளிக்கும் போது தகுதியின் அடிப்படையில் ஜாமீன் பெற அமைச்சர் தனது உரிமையை வைத்திருக்கிறார்; ஜாமீன் மனு மீதான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அக்டோபர் 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்
அதன் பேரில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.