Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அப்போது மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதனுடன் 9 முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!