Skip to content
Home » மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

  • by Senthil

தமிழக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விபரம்… அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என தனி சலுகை எதுவும் கிடையாது. சிறை விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு அறை மற்றும் உணவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறை எப்போதும் மகிழ்ச்சி தரும் இடம் கிடையாது. அந்த வகையில் அமைச்சருக்கும் கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கும். மேலும் அவர் தனிமையிலேயே இருக்கிறார். புத்தகங்கள் வாசிக்கிறார் மற்றபடி யாரிடமும் பேசுவதாக தெரியவில்லை.   பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் அறிவுரைகளின் அடிப்படையில் உணவு வழங்கப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் மெலிந்து காணப்படுகிறார். எடையும் குறைந்து இருப்பதாக மருத்துவகள் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் தனது வக்கீலை மட்டுமே சந்திக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றபடி உறவினர்கள், நண்பர்கள் என யாரையுமே சந்திக்கவில்லை… இவ்வாறு சிறைத்துறை டிஐஜி கனகராஜ் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!