Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில்  உள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக  சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!