Skip to content
Home » காலை உணவு திட்டம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..

காலை உணவு திட்டம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்ககூடிய காலை உணவினால் கவனக்குறைவின்றி நன்றாக படிப்பதுடன் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் இத்திட்டத்தால் மிகுந்த பயன்பெறுவார்கள் எனவே, இதனை பள்ளி மாணவ, மாணவியர் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!