தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து
வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் அவர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.