சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இன்று (ஆக.28) பதிலுரையாற்றி பேசிய அமைச்சர் வன்னி அரசு, கம்யூனிஸ்ட் தலைவர்களை அறிமுகப்படுத்தியவர் தனது தந்தை மல்லப்பன் ரத்தினசாமி என்று குறிப்பிட்டபோது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் அமைதியாக இருந்த அவருக்கு, அருகில் இருந்த உறுப்பினர்கள் ஆறுதல் கூறி தண்ணீர் பருக அறிவுறுத்தினர். அதன்பின்னர் தனக்கு வாய்ப்பளித்த தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
