Skip to content
Home » காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு இல்லை என்று கூறி விடுகிறார். இந்நிலையில் மாரியம்மாளின் ஆதார் கார்டு பெயர் மாற்றம் செய்ய ஆலத்தூருக்கு சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் மாரியமாவை அழைத்துச் சென்றுள்ளார். அன்றிலிருந்து இதுவரை காணவில்லை மாரியம்மாளின் மகன் ராஜ்குமார் தனது தாயை காணவில்லை என்று மருவத்தூர் காவல் நிலையத்தில் 18/6/2023 ஆம் தேதி புகார் கொடுத்ததின் பேரில் மருவத்தூர்

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாரியம்மாளை தேடி வந்த நிலையில் இன்று கொளக்காநத்தம் ஓடை பகுதியில் இருந்து நிலையில் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையின் காணாமல் போன மாரியம்மாள் என தெரியவந்தது. பணத்திற்காக கொலை செய்து எரித்து இருக்கலாம் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அழைப்புச் சென்ற சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!