Skip to content
Home » மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

  • by Senthil

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்தியா முழுவதும் கடும்   அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து  உள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர்  எடப்பாடி  பழனிசாமி  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.  இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!