Skip to content
Home » தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.19ம் தேதி கமாலுதீன் இறந்து விட்டார். இதனால் பணம் முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீடு பணத்தை கேட்ட போது அவர்களுக்கு தரப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ராஹத் ப திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்த 5 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த பஸ் நிறுவன மேலாளர் நாராயணசாமியை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் நேற்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!