Skip to content
Home » திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாகை  மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  வரும் 25ம் தேதி காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்கிறார்.

2-வது நாள் 26-ந்தேதி காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.  பின்னர் 27-ந்தேதி நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு  விமானம் மூலம் திருச்சி  வந்தடைகிறார். அங்கிருந்து காரில்   வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். பின்னர் 25-ந்தேதி சுற்றுப்பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறார். பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!