இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் 73 வயதான முத்தரசன் ஒரு திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
அப்படிப்பட்டவர் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விவசாயத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் அரிசி என்ற திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 35 நாட்களாக நடந்து வருகிறது.
முத்தரசன் நடிக்க வந்தது குறித்து படத்தை இயக்கும் எஸ்.ஏ.விஜய்குமார் கூறும்போது, “முத்தரசனிடம் இதில் நடிக்கக் கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். தனக்கு அரசியல் பணிகள் அதிகம் இருக்கின்றன என்று கூறிவிட்டார். இருந்தாலும் இந்தக் கதையில் நடித்து இதன் கருத்தை நீங்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று சொன்னோம். பிறகு கதையைக் கேட்டார். விவசாயப் பின்னணி கதை. முதலில் தயக்கத்துடன் படப்பிடிப்புக்கு வந்தார். பிறகு சகஜமாகிவிட்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. மனித வாழ்வின் உயிர் நாடி என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதுதான் கதை. விவசாயியாக நடித்திருக்கும் இரா. முத்தரசன் பேசும் வசனங்கள் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.