Skip to content
Home » நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

  • by Senthil

நாகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாகை நகர அதிமுக சார்பாக அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை நாகை மாவட்ட அதிமுக

செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் நுங்கு உள்ளிட்டவைகளை ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.  நாகை நகரக் கழகச் செயலாளர் தங்க. கதிரவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!