Skip to content
Home » நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு போலீசார்;

‘ஊழலை மறுப்போம்’ ‘தேசத்தை காப்போம்’ என்பதை வலியுறுத்தி, நாகையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .தேசிய மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பள்ளி மாணவர்களின் பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனை

தொடர்ந்து முக்கிய நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற விழிப்புணர்வு பேரணியானது அவுரித்திடலில் நிறைவடைந்தது. பேரணியில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். அரசு அலுவலர்கள் தங்களது கடமையை செய்து கொடுக்க லஞ்சம் வாங்க கூடாது என்பன துண்டு பிரசுரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார், பொதுமக்களுக்கு வழங்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!