நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க வேண்டும் , 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க தனி இடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தைக்கு அழைத்த நகராட்சி ஆணையர் நாராயணசாமி தூய்மை பணியாளர்களை குப்பைகளை தங்களின் வீடுகளில் கொட்டிக் கொள்ளுங்கள் எனவும், நீ வா போ எனவும்
ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலை அடைத்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கையுறை போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மனித கழிவுகள் மற்றும், மக்கும் குப்பை மக்கா குப்பைகளை தரம் பிரிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நகராட்சி ஆணையர் மீது குற்றம்சாட்டினர். பின்னர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். நகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக இன்று இரண்டாவது நாளாக நாகை நகராட்சியின் 36 வார்டுகளின் குப்பைகள் அல்லப்படாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.