Skip to content
Home » நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்ட மீனவர்கள்  நேற்று முன்தினம்  கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு வந்து, எல்லை தாண்டி வந்து உள்ளீர்கள் எனக்கூறி,  15 நாகை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது அவர்கள்  காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அவர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  தொடர்ந்து தமி்ழக மீனவர்கள்  இலங்கை படையினரால் அத்துமீறி கைது செய்யப்படுவதால்  தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!