Skip to content
Home » நாகை அருகே வீட்டில் புகுந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு…

நாகை அருகே வீட்டில் புகுந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு…

  • by Senthil

நாகை மாவட்டம், நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன் இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறம் மற்றும் மேற்கு புறத்தில் மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது, இங்கு நல்லபாம்பு, சாரைப் பாம்பு, கருநாகம், மற்றும் நட்டுவாக்களி, தேள் ஏராளமான உள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது பாம்புகள் அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது. 2 வருடத்தில் இப்பகுதியில் சுமார் 27 க்கும் மேற்பட்ட விசபாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த நிலையில் மூங்கில் காட்டில் இருந்து வெளியேறிய நல்ல பாம்பு பாஸ்கரின் வீட்டிற்குள் புகுந்தது அப்போது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த பாஸ்கரின் மனைவி வசந்தி பாம்பைப் பார்த்து பயத்தில் கூச்சலிடவே சீரிய பாம்பு படம் எடுத்து பின்னர் வெளியே வந்து கோழி கூண்டில் வைக்கப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டது. உடனடியாக நாகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த அவர்கள் பாம்பு தப்பி செல்கிறதா என கண்காணித்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரிடம் பாம்பை காண்பித்தனர். அவர்கள் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் 7 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்து பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். தொடர்ந்து விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சொந்தமான மூங்கில்களை அகற்ற உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!