Skip to content
Home » நாகையில் கொலை குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…..

நாகையில் கொலை குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…..

  • by Senthil

நாகை அக்கரை குளம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ் என்ற முனீஸ்வரன் (41), மருந்து கொத்தள ரோடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் (27), செம்மரக்கடை சந்தை சேத்தப்பா என்கிற சாகுல் ஹமீது (44) ஆகிய 3 பேர் மீது நாகை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்தார். இதை எடுத்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததையடுத்து முனீஸ், அலெக்ஸ், சேத்தப்பா ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதில் முனீஸ் சென்னை புழல் சிறையிலும், அலெக்ஸ், சேத்தப்பா ஆகியோர் திருச்சி மத்திய சிறையிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!