Skip to content
Home » நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் பேரணியில் தனியார் பயிற்சிப் பள்ளி நான்கு சக்கர வாகனங்கள் அவர் திடலில் இருந்து துவங்கிய பேரணி மருத்துவமனை சாலை நீலா மேலவீதி, கீழவீதி பப்ளிக்

ஆபீஸ் ரோடு வழியாக காடம்பாடி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது பேரணியில் சீட் பெல்ட் அல்லது அவசியம் குறித்தும் சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பேரணி நடைபெற்றது பின்னர் வாகனங்களின் வெளிச்சத்தைக் குறைக்கும் வகையில் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!