ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று பகல் பத்து முதல் நாள் தொடங்கியது. நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து இரண்டாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் முத்து கிரீடம்,வைர காதுகாப்பு,ரத்ன அபயஹஸ்தம்,நெல்லிக்காய் மாலை,காசு மாலை,அண்ட பேரண்ட பட்க்ஷி,
அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.