இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் டில்லியில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் ப. சிதம்பரம், தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து கூறியதாவது:
நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இட ஒதுக்கீடு 50% ல் இருந்து அதிகரிக்கப்படும்.
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்புவோம். ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்படும்.
எஸ்.சி, எஸ்டி, ஓபிசி காலி பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.
அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படுவார்கள். அங்கன்வாடியில் மேலும் 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
2025ல் பெண்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் 50% ஒதுக்கீடு வழங்கப்படும்.
10% இட ஒதுக்கீடு சாதிப்பாடுபாடின்றி வழங்கப்படும்.
21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மனித கழிவுகளை மனிதன் அள்ளும் முறை ஒழிக்கப்படும்.
மகாலட்சுமி திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும்.
அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படும்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.
மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றப்படும்.
100 நாள் வேலைக்கு ரூ.400 கூலி வழங்கப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தப்படும்.
இன்னும் பல்வேறு திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.