Skip to content
Home » நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

  • by Senthil

டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

நடிகர் விஜய்

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளதாக தகவல் வௌியானது.  இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் செல்லும்

நடிகர் விஜய் அங்கிருந்து காரில் சாலைமார்கமாக வந்தடைந்தார்.

இதனைதொடர்ந்து நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கு நிகழ்ச்சியில் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விஜய் வழங்கினார்.  மேலும் நிவாரணத்தொகை ம ற்றும் பொருட்களை வழங்கினார். நெல்லை, தூத்துக்குடியில் வௌ்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கினார் விஜய். மக்கள்  விஜய்க்கு  நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!