தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் இன்று (29.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்வுகளில் ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராடசிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.