Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  நாளை முதல் 22ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,தூத்துக்குடி ,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!