Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,சிவகங்கை ,தூத்துக்குடி ,திருநெல்வேலி ,தென்காசி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,  திருவள்ளூர் ,சென்னை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் , திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!