பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை திருவாரூர் கடலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க அமைப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்தது. இந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே தமிழக முதல்வர் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். நிலக்கரி சுரங்கத்திற்கு தமிழக விவசாயிகளிடமிருந்து அதிக அளவு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, நிலக்கரி சுரங்கத்
திட்டம் தஞ்சை திருவாரூர் ஆகிய காவிரி டெல்டாவில் கைவிடப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து இன்று நாகையில் காவிரி விவசாயிகள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவிரி விவசாயிகள் மத்திய அரசை வாழ்த்தி, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.