Skip to content
Home » மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..

மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..

பாராளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 2 தேர்தல்களிலும் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகியுள்ளார். இன்றைய தினம் யவத்மால் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளரை ஆதரித்து புஷாத் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதின் கட்கரி பேசிக் கொண்டு இருந்தார்.  அப்போது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் உடல்நலன் தேறியதைத் தொடர்ந்து பேச்சை நிறைவு செய்தார்.
இது தொடர்பாக நிதின் கட்கரி ‛எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரசாரத்தில் அதிக வெப்பம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. தற்போது உடல்நலன் தேறியது. அடுத்த கூட்டத்திற்கு செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!