Skip to content
Home » பாஜக கூட்டணி தலைவர்கள் கூட்டம்…. சந்திரபாபு நாயுடுக்கு அழைப்பு இல்லை…

பாஜக கூட்டணி தலைவர்கள் கூட்டம்…. சந்திரபாபு நாயுடுக்கு அழைப்பு இல்லை…

  • by Senthil

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடக்கிறது. இதில் பாஜக தனது கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து பவன் கல்யாண் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் பாஜக தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கேள்வி குறியாகி உள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவராக என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பா.ஜ.க, பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து தனித்து போட்டியிடும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!