Skip to content
Home » நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்,  தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை உடனே ஏற்பதாகவும் மற்ற கேரிக்கைகள் குறித்து பொங்கல்  முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்திசுமூக முடிவு  காணலாம் என  அமைச்சர்  சிவசங்கர்  கூறினார். இதனை தொழிலாளாகள் ஏற்கவி்லை.  எனவே நாளை ஸ்டிரைக் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: நாளை வழக்கம் போல   பஸ்கள் ஓடும். தொமுசவினர் பஸ்களை இயக்குவார்கள்.  மற்ற தொழிற்சங்கத்தினரும் பஸ்களை ’ஓட்டுவார்கள்.  தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை உடனே ஏற்பதாகவும், மற்ற 4 கோரிக்கைகளை  பொங்கலுக்கு பின்னர் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறினோம் அவர்கள் ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!