Skip to content
Home » வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி மக்களவைக்கு உட்பட்ட,  சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.  காலை 11 மணி அளவில் வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்றிருந்த  சின்னப்பொண்ணு(77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி பார்த்தனர். எழும்பவில்லை. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் சின்னப்பொண்ணு இறந்து விட்டதாக தெரிவித்தார். வாக்குச்சாவடியில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!